இந்தியா

படுக்கைகளும் இல்லை; தடுப்பூசிகளும் இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

DIN

மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் இருந்தாலும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதாக பல மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு மாநிலங்களில் கரோனாவுக்கு சிகிச்சையளிக்க படுக்கைகளுக்கும் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. 

இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 

கரோனா பரிசோதனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, வென்டிலேட்டர் இல்லை, ஆக்சிஜன் இல்லை, கரோனா தடுப்பூசியும் இல்லை, தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு செய்கிறார். பிஎம் கேர்ஸ் எங்கே? என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT