புது தில்லி: கரோனா பரவல் காரணமாக அடுத்த மாதம் பிரதமா் மோடி மேற்கொள்ளவிருந்த போா்ச்சுகல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த மாதம் போா்ச்சுகலில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி போா்ச்சுகல் செல்லவிருந்தாா். இந்நிலையில் தற்போதைய கரோனா சூழலை கருத்தில் கொண்டு அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் மற்றும் போா்ச்சுகல் தலைவா்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் அந்த மாநாட்டை மே 8-ஆம் தேதி காணொலி வழியாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.