இந்தியா

கோவாவின் முன்னாள் அமைச்சர் சோம்நாத் ஜுவர்கர் கரோனாவுக்கு பலி

DIN

கோவாவின் முன்னாள் அமைச்சர் சோம்நாத் ஜுவர்கர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுக்கு உயிரிழந்ததாக அவரது குடும்ப வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.

அவருக்கு வயது 74. ஜுவர்கர் கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதன்பின்னர் இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று இரவு அவரது உயிர் பிரிந்தது. 

காங்கிரஸ் கட்சியில் 1989 முதல் 2002 வரை பனாஜிக்கு அருகிலுள்ள தலீகாவோ சட்டமன்றத் தொகுதியில் இருந்தவர். 

பிரதாப்சிங் ரானே மற்றும் ஃபிரான்சிகோ சர்தினா தலைமையிலான அரசில் சிவில், ஒத்துழைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சராக ஜுவர்கர் பணியாற்றினார்.

கோவாவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஸ்ரீ சோம்நாத் ஜுவர்கர் காலமானது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் சுட்டுரையில் செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT