உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு 
இந்தியா

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

DIN

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போப்டேவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று காலை என்.வி.ரமணா பொறுப்பேற்றார். 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரமணா, ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், கடந்த 2000-ம் ஆண்டில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் நீதியாகவும் நியமிக்கப்பட்டார். 

இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அடுத்தாண்டு ஆகஸ்டு 26-ம் தேதி வரை ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகச் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

SCROLL FOR NEXT