முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் முதல்வர் பினராயி விஜயன் கூறியது:

"மாநிலத்தில் புதிதாக 38,607 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 48 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. தினசரி கரோனா பாதிப்பில் இதுவே புதிய உச்சம். மொத்த பலி எண்ணிக்கை 5,259 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 12,44,301 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.