முகப்பு
இந்தியா

உ.பி.யில் புதிய உச்சம்: ஒரேநாளில் கரோனாவுக்கு 298 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 298 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 298 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,17,955 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 298 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,241ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,09,237 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 25,613 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,96,477ஆக உயர்ந்துள்ளது. 
இதுவரை 4.03 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நேற்று மட்டும் 2.25 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 2,38,856 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.