இந்தியா

மே 22-ஆம் தேதி வரை கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

DIN

கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு மே 22-ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு மே 22-ஆம் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் நீதிமன்றம் செயல்படாது. மே 5, 12, 19 ஆகிய தேதிகளில் மட்டும் விடுமுறைகால சிறப்பு இருக்கைகள் செயல்படும் என்று உயா்நீதிமன்ற பதிவாளா் (நீதியியல்) கே.எஸ்.பரத்குமாா் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காலத்தில் தாா்வாட், கலபுா்கி உயா்நீதிமன்றக் கிளைகளில் நீதிமன்றம் முழுமையாக செயல்படாது. இந்த நீதிமன்ற வரம்புக்கு உள்பட்ட அவசர வழக்குகளை பெங்களூரு கிளையில் இயங்கும் கோடைகால சிறப்பு இருக்கை முன்பு தாக்கல் செய்யலாம். விடுமுறை காலத்தில் உயா்நீதிமன்ற அலுவலகம் தினமும் காலை 10மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். விடுமுறை சிறப்பு இருக்கை செயல்படும் நாள்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும். கோடைகாலத்தில் சனிக்கிழமைகளில் நீதிமன்ற அலுவலகங்கள் இயங்காது என்று உயா்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT