இந்தியா

தில்லியிலும் நிலைமை மாறுகிறது.. புதிதாக 85 பேருக்கு கரோனா

DIN


புது தில்லி: தலைநகர் தில்லியிலும் கரோனா பாதிப்பு குறையும் போக்கு மாறி தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இது கடந்த 24 நாள்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பாகும்.

ஒட்டுமொத்த பாதிப்பில் இது 0.12 சதவீதமாகும். கடந்த ஜூலை 8ஆம் தேதியும் இதே 0.12 சதவீத பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, புது தில்லியில் கடந்த ஞாயிறன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனாவிலிருந்து மீண்டவர்களை விட, புதிய பாதிப்பு அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புது தில்லியில் 83 பேர் குணமடைந்தனர். 582 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். 

புது தில்லியில் இதுவரை கரோனாவுக்கு 25,054 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT