வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்) 
இந்தியா

‘விவசாயிகள் பிரச்னை குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க தயார்’: மத்திய அமைச்சர்

விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.

ANI

விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று ஜந்தர் மந்தருக்கு சென்றுள்ளனர்.

இதுகுறித்து வேளாண் அமைச்சர் தோமர் கூறியது:

“விவசாயிகள் குறித்து உண்மையிலேயே எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இரு அவைகளிலும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஏன் விவாதிக்க தயாராக இல்லை? அவர்கள் ஊடக வெளிச்சத்தை தான் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தில்லி ஜந்தர் மந்தரில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

SCROLL FOR NEXT