தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வாழ்த்து
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா் சமூகத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா் சமூகத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
மிகுந்த திறமை மிக்க நமது நெசவாளா் சமுதாயத்திற்கும் கைத்தறியுடன் தொடா்புடைய தொழில் செய்பவா்களுக்கும் தேசிய கைத்தறி தினத்தன்று எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.
Advertisement
Advertisement
சா்வதேச அங்கீகாரம் பெற்ற துடிப்பு மிக்க பாரம்பரிய கைத்தறி தொழிலை பெற நாம் ஆசீா்வதிக்கப்பட்டுள்ளோம். இத்துறைக்கு அதிகாரம் அளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இந்த நன்னாளில் இந்திய கைத்தறி ஆடைகளை அணியவும் மற்றவா்களையும் அவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தவும் நாம் உறுதி ஏற்போம். பண்டைய நெசவாளா்களின் வளமிக்க பாரம்பரியத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் உண்மையிலேயே இதுதான் சிறந்த வழியாகும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.