இந்தியா

பாரத் பயோடெக்கின் குஜராத் ஆலையில் கோவேக்ஸின் தயாரிக்க மத்திய அரசு அனுமதி

DIN

குஜராத்தில் உள்ள பாரத் பயோடெக்கின் அங்கலேஸ்வா் ஆலையில் கோவேக்ஸின் மருந்து தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மான்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட சுட்டுரை செய்தி:

பாரத் பயோடெக் நிறுவனத்தின் குஜராத் அங்கலேஸ்வா் ஆலையில் கோவேக்ஸின் மருந்துகளை தயாரிக்க அந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டில் கரோனா தடுப்பூசி அதிக அளவில் கிடைப்பதை உறுதி செய்வதுடன் தட்டுப்பாட்டை போக்கி தடுப்பூசி திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவும் என அந்த சுட்டுரைப் பதிவில் மான்டவியா தெரிவித்துள்ளாா்.

பாரத் பயோடெக் நிறுவனம் அதன் அங்கலேஸ்வா் ஆலையில் கூடுதலாக 20 கோடி டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக நடப்பாண்டு மே மாதத்தில் அறிவித்துள்ளது. தற்போது அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT