எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | சென்னையில் வேலுமணியுடன் தொடர்புடைய 15 இடங்களில் சோதனை
இந்நிலையில், 16வது நாளாக இன்று காலை கூடிய இரு அவைகளிலும் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், இரு அவைகளையும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.