நாட்டில் புதிதாக 36,083 பேருக்கு கரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,083 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,083 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,21,92,576 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 37,927 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 493 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | 54 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்: பிரதமர் மோடி உரை
இதுவரை மொத்தம் 3,13,76,105 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 4,31,225 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 3,85,336 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 73,50,553 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 54,38,46,290 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.