முகப்பு
இந்தியா

இமாச்சல் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் இறந்திருந்த நிலையில் தற்போது மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டு பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
இமாச்சல் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
பகிர்:

இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் இறந்திருந்த நிலையில் தற்போது மேலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டு பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருக்கிறது.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவை சந்தித்து வந்த இமாச்சலில் கடந்த 11 ஆம் தேதி கின்னாரில் 30 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற அரச பேருந்து  நிலச்சரிவில் சிக்கிக்கொண்டது .

உடனே அங்கு விரைந்த பாதுகாப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளே சிக்கியிருந்தவர்களை  காப்பாற்றினாலும்  போதுமான ஆக்சிஜன் இல்லாததால் சிலர் இறந்தனர்.

இந்நிலையில் காலை மேலும் இரண்டு சடலங்களை மீட்ட மீட்புப்படையினர் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்திருப்பதை உறுதி செய்தனர்.

தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க  மாநில அரசு முன்வந்திருக்கிறது.

முன்னதாக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விபத்தில் இறந்தவர்களுக்கு 2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 தரப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →