முகப்பு
இந்தியா

'சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிக்கின்றனர்' - உ.பி. முதல்வர் பேச்சு

சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சட்டப்பேரவையில் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் நடக்கும் நிலையில் சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.  

முன்னதாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க், 'தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள். ஆப்கானிஸ்தான் மக்களும், அவர்களின் தலைமையின்கீழ் இருக்கவே விரும்புகிறார்கள்' என்று தெரிவித்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு சட்டப்பேரவையில் பேசியுள்ளார். 

ஆனால் சமாஜ்வாதி எம்.பி. பார்க், தன்னுடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.