இந்தியா

மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் பலி

DIN

மகாராஷ்டிரத்தில் லாரி கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் பலியானார்கள்.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் இன்று நெடுஞ்சாலை திட்டப்பணிக்காக தொழிலாளர்கள் சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் பயணித்த 12 தொழிலாளர்கள் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தாக கூறப்படுகிறது. 

பலியான தொழிலாளர்களில் பெரும்பாலனோர் பிகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT