கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகளை மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலின்கீழ் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கேசங் டோமா பூட்டியா, ரபீந்திரநாத் சமந்தா, சுகாதோ மஜும்தர், பிவாஸ் பட்டநாயக் மற்றும் ஆனந்த குமார் முகர்ஜி ஆகியோர் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உடல்நலத்தைப் பாதிக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!
இவர்களில் சுகாதோ மஜும்தர் மற்றும் பிவாஸ் பட்டநாயக் ஆகியோர் இரண்டு ஆண்டு காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக தொடர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.