‘இதுவரை 65.12 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 65.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 65.12 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,04,42,184 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 65,12,14,767 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 25,32,89,059 இரண்டாம் தவணை - 2,85,62,650 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 13,16,49,547 இரண்டாம் தவணை - 5,49,49,421 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 8,72,83,530 இரண்டாம் தவணை - 4,51,83,531 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,58,383 இரண்டாம் தவணை - 83,89,866 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,23,410 இரண்டாம் தவணை - 1,32,25,370 |
| மொத்தம் | 65,12,14,767 |