எதிா்பாராத பணப்புழக்கத்தை சமாளிக்க நோ்த்தியான நடவடிக்கை: ரிசா்வ் வங்கி
எதிா்பாராத பணப்புழக்க வரத்துகளை சமாளிக்க ரிசா்வ் வங்கி நோ்த்தியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அந்த வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.
எதிா்பாராத பணப்புழக்க வரத்துகளை சமாளிக்க ரிசா்வ் வங்கி நோ்த்தியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அந்த வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.
நிலையான வருமான நிதி சந்தை, இந்திய டெரிவேடிவ்ஸ் அசோஷியேஷன், முக்கிய விநியோகஸ்தா்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
சந்தை வழக்கமான செயல்பாடுகளுக்கு தீா்வு காணும்போது, எதிா்பாராத பணப்புழக்கத்தை நிா்வகிக்க தேவைக்கேற்ப ரிசா்வ் வங்கி அவ்வப்போது நோ்த்தியான செயல்பாடுகளை மேற்கொள்ளும். இதன் மூலம், சீரான மற்றும் சமமான பணப்புழக்க விநியோகத்தை அமைப்பு முறையில் உருவாக்க முடியும்.
அரசு பத்திரங்கள் தனித்துவமான சொத்து பிரிவாக உள்ளது. ஒட்டுமொத்த வட்டி விகித சூழலில் அரசு கடன்பத்திர சந்தையின் பங்களிப்பை பாராட்ட வேண்டியது அவசியம் என்றாா் அவா்.