இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி: மத்திய அரசு
இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவில் மீண்டும் ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:
"இந்தியாவில் மீண்டும் ஒருமுறை ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி செலுத்தும் திட்டம் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது."
சனிக்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 93 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 127 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.