ஹெலிகாப்டர் விபத்து: மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.
சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் விளிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.
இதையும் படிக்க | விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விபின் ராவத்
இந்நிலையில், குன்னூர் அருகே ஹெலிகாப்டர் சென்ற போது விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விபத்து குறித்து தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மூத்த அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.