நாட்டில் புதிதாக 9,419 பேருக்கு கரோனா
நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 9,419 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 9,419 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 65.19 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 94,742 ஆக அதிகரித்துள்ளது.
அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 8,251 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 159 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,74,111ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 130.39 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.