மகாராஷ்டிரம்: முதல் ஒமைக்ரான் நோயாளி குணம்
மகாராஷ்டிரம் மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் ஒமைக்ரான் தொற்று பாதித்த நபர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் கண்டறியப்பட்ட முதல் ஒமைக்ரான் தொற்று பாதித்த நபர் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
கரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா (ஒமைக்ரான்) தொற்று கண்டறியப்பட்டது. பல நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் ஒமைக்ரான் வேகமாக பரவத் தொடங்கியது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 33 வயதான மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கப்பல்துறை பொறியாளருக்கு முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று (டிச.8) அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.