விபின் ராவத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உத்தரகண்ட் முதல்வர் ஆறுதல்
முப்படை தளபதி விபின் ராவத்தின் குடும்பத்தினரை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து இன்று ஆறுதல் கூறினார்.
முப்படை தளபதி விபின் ராவத்தின் குடும்பத்தினரை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இவர்களின் உடலுக்கு வெலிங்டன் ராணுவ தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தராஜன், அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க-சர்வதேச விமான சேவைக்கான தடை 2022 ஜனவரி வரை நீட்டிப்பு
இதனைத் தொடர்ந்து தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் 13 பேரின் உடல்களும் சூலூர் விமானப்படை தளத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் சூலூரிலிருந்து இன்று மாலை ராணுவ விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தில்லியில் முப்படை தளபதி விபின் ராவத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆறுதல் கூறினார். ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தளபதி விபின் ராவத் உத்தரகண்ட் மாநிலம் சாய்னா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.