முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா; 132 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா
பகிர்:

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 66.51 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 82,267 ஆக உள்ளது.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 8,077 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 132 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,77,554ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் இதுவரை 137.67 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →