இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் 3 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஸ்ரீநகர் மாவட்டத்தில் பந்தா செளக் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் ராணுவத்தினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்த மோதலில் ஒரு மத்திய பாதுகாப்புப் படை வீரரும், 3 காவலர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக புதன்கிழமை இரவு ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 தீவிரவாதிகளும் ஒரு காவலரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT