இந்தியா

மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

DIN

வருகிற பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார். 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி தேசியக் கட்சித் தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த ஜனவரி 23, 24, 25 தேதிகளில் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்தார். கரூர், அரியலூர், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதையடுத்து, இரண்டாம் கட்ட பிரசாரத்துக்காக வருகிற பிப்ரவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார். 

அன்றைய தினம் மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடியும் தமிழகம் வரவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT