முகப்பு
இந்தியா

தில்லி வன்முறை: கைதான 115 பேரின் பட்டியல் வெளியீடு

தில்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
பகிர்:


தில்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

குடியரசு நாளன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக விவசாயிகளை தில்லி காவல்துறையினர் கைது செய்து தில்லி நகரின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (பிப்.3) வெளியிட்டுள்ளார். 

டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள், காணாமல் போனதாக குடும்பத்தினர் தேடுவார்கள் என்பதால் தில்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →