முகப்பு
இந்தியா

ரமலான் பண்டிகையில் சிபிஎஸ்இ தேர்வு: தேதியை மாற்ற சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
ரமலான் பண்டிகையன்று சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்றுக: சு. வெங்கடேசன் எம்.பி.
பகிர்:

ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு இது குறித்து அனுப்பியிருக்கும் கடிதத்தில், சு. வெங்கடேசன் கூறியிருப்பதாவது, ரமலான் பண்டிகை மே-14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பிறையின் அடிப்படையில் மே-13 அல்லது 15-ஆம் தேதியிலும் பண்டிகை அமையலாம். 

ஆனால் இந்த இரு தேதியிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவ, மாணவிகளை அவர்களது முக்கிய பண்டிகை நாளில் தேர்வெழுத வைப்பது சரியாக இருக்காது. 

Advertisement

எனவே, ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments