முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா பரிசோதனை 20 கோடியைத் தாண்டியது: ஐ.சி.எம்.ஆர்.

நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டு தொற்று அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. 

கரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 7,40,794 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20,06,72,589-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →