ஆந்திரத்தில் 73, கர்நாடகத்தில் 487 பேருக்கு கரோனா
ஆந்திரத்தில் புதிதாக 73 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 487 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 73 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 487 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரம்: ஆந்திரத்தில் புதிதாக 73 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,88,423 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1,003 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இதுவரை 8,80,261 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,159 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகம்: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 487 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,40,170ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,236ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 493 குணமடைந்தனர்.
Advertisement
இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,24,304ஆக உயர்ந்துள்ளது. 5,959 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.