திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு!
திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்கப்பட்டது பற்றி...
பெரம்பூரைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளே முதல்வர் வேட்பாளர்களான திமுக மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Advertisement
Advertisement
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டிடுகிறார். திருச்சி கிழக்கில் ஏப். 2 ஆம் தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வேட்புமனுவில் குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்கள் விடுபட்டதை தொடர்ந்து, பெரம்பூர் தொகுதியில் மீண்டும் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று (ஏப். 6) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 2,500-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்யின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
TVK Leader Vijay's Nomination Accepted in Trichy East as Well!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.