முகப்பு
இந்தியா

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி என அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது பற்றி...

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:32 AM
ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு - ANI
பகிர்:

ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

வருகின்ற 2026 ஜூன் 2 முதல் சட்டப்பூர்வமாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழ்

பின்னணி: ஒருங்கிணைந்த ஆந்திரம் 2 மாநிலங்களாக ஆந்திரம், தெலங்கானா எனப் பிரிக்கப்பட்டது. அப்போது, முந்தைய ஆந்திர மாநில தலைநகராக விளங்கிய ஹைதராபாத் நகரம், தெலங்கானா மாநிலத் தலைநகராக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு அமராவதி தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும், 2019 முதல் 2024 வரை ஆந்திரத்தில் ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு, ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்களை அறிவித்தது.

ஆனால் 2024 தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சி வென்று மீண்டும் ஆட்சியமைத்ததும் அமராவதி மீண்டும் தலைநகராக்கப்பட்டது. இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா கொண்டுவரக் கோரி ஆந்திர அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

summary

Amaravati is the Capital of Andhra Pradesh! Notified in the Gazette!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments