மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,673 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,673 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,673 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,622 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 30 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,44,071 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19,55,548 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 51,310 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 35,948 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அந்த மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 95.67 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.51 சதவிகிதமாக உள்ளது.
1,72,311 பேர் வீடுகளிலும், 1,979 கண்காணிப்பு மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.