மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,515 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,515 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அந்த மாநிலத்தில் புதிதாக 2,515 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,48,802 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,554 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 35 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,61,525 பேர் குணமடைந்துள்ளனர். 51,360 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 34,460 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
குணமடைவோர் விகிதம் 95.74 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.51 சதவிகிதமாக உள்ளது.