முகப்பு
இந்தியா

கரோனா பலி எண்ணிக்கை விகிதத்தில் குறைவு: மத்திய சுகாதாரத் துறை

​நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களில் 71 சதவிகிதம் பேர் கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களில் 71 சதவிகிதம் பேர் கேரளம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

அப்போது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் பூஷண் கூறியது:

Advertisement

"கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 35,000-க்கும் மேல் உள்ளது. மொத்தம் சிகிச்சை பெற்று வருபவர்களில் இந்த 2 மாநிலங்களில் மட்டும் 71 சதவிகிதம் அடங்குவர். கேரளத்தில் 65,670 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், மகாராஷ்டிரத்தில் 35,991 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,000-க்கும் குறைவாகவே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மொத்த கரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருவோர் விகிதம் வெறும் 3.12 சதவிகிதம்தான். மொத்தம் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. மேலும் குறைந்து வருகிறது. 

15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பலி பதிவாகவில்லை. 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3 வாரங்களாக கரோனா பலி பதிவாகவில்லை. கடந்த 5 வாரங்களில் சராசரி கரோனா பலி எண்ணிக்கை விகிதம் 55 சதவிகிதம் குறைந்துள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments