கேரளத்தில் 10 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 5,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 5,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 6,475 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 19 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,77,394 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,09,102 பேர் குணமடைந்துள்ளனர், 3,902 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் 64,131 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 69,844 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7.47 சதவிகிதமாக உள்ளது. இதுவரை மொத்தம் 1,02,14,097 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய எவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை.