65 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
நாட்டில் இதுவரை 65.28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
நாட்டில் இதுவரை 65.28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 6.30 மணி வரை 2,69,202 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 1,02,941 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 1,66,261 பேர் முன்களப் பணியாளர்கள். இதுவரை மொத்தம் 65,28,210 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 55,85,043 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 9,43,167 பேர் முன்களப் பணியாளர்கள்."
Advertisement
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.