இந்தியா

உ.பி. சஹரான்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

DIN

உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் நடைபெற்று வரும் மகாபஞ்சாயத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கலந்து கொள்ள இருந்த நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் சஹரான்பூரில் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சட்டம் ஒழுங்கு சிக்கல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் இது ஒரு வழக்கமான நடைமுறை என விளக்கமளித்துள்ளார்.

எனினும் சஹரான்பூரில் நடைபெறும் மகா பஞ்சாயத்தில் திட்டமிட்டபடி கலந்துகொள்ள உள்ளதாக பிரியங்கா காந்தி உறுதி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT