முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,297 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,297 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,297 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,297 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,52,905ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 51,415ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30,265 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 6,107 பேர் குணமடைந்தனர். 
இதுவரை 19,70,053 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments