முகப்பு
இந்தியா

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு,

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே
பகிர்:


புது தில்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு, அப்பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும், அதில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலங்களகை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் பிப்ரவரி 15-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், அந்தப் பதவியிடம் காலியாகிறது.

குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
 

முழு கட்டுரையைப் படிக்க →