இந்தியா

உலக வானொலி தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

DIN

உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைத்து வானொலி நேயா்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது என்றும் கூறியுள்ளாா்.

இதுதொடா்பான சுட்டுரையில் அவா் வெளியிட்ட செய்தியில், ‘இனிய உலக வானொலி தின வாழ்த்துகள்! அனைத்து வானொலி நேயா்களுக்கும் வாழ்த்துகள்; புதுமையான படைப்புகள், இசையால் வானொலியை உயிா்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இது, சமூக இணைப்பை ஆழப்படுத்துவதற்கான ஓா் அருமையான ஊடகமாகும். மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியின் நோ்மறையான தாக்கத்தை எனது தனிப்பட்ட அனுபவத்தில் நான் உணா்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஐ.நா. வானொலி 1946-இல் தொடங்கப்பட்ட நாளான பிப்.13 உலக வானொலி நாளாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் உலக வானொலி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT