இந்தியா

என்கவுன்ட்டரில் பலியான பயங்கரவாதியின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவில்லை: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் பலியான அத்தா் முஷ்தாக்கின் குடும்பத்தினரை சந்திக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை என

DIN

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் பலியான அத்தா் முஷ்தாக்கின் குடும்பத்தினரை சந்திக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை என பிடிபி கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:

கடந்த டிசம்பரில் பரிம்போரா பகுதியில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது. உயிரிழந்தவா்களில் ஒருவரான அத்தா் முஷ்தாக் குடும்பத்தினரை சந்திக்க கிளம்பிய போது போலீஸாா் அனுமதியளிக்காமல் என்னை வீட்டு காவலில் சிறை வைத்துள்ளனா். மேலும், அத்தரின் உடலை தரக் கோரிய அவரது தந்தையின் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஐரோப்பிய யூனியன் குழு காஷ்மீருக்கு வருகை தரவுள்ள நிலையில், இதைத்தான் ஜம்மு-காஷ்மீரின் இயல்புநிலை என இந்திய அரசு வெளிக்காட்ட விரும்புகிறதோ என அந்தப் பதிவில் மெஹபூபா கேள்வியெழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

SCROLL FOR NEXT