முகப்பு
இந்தியா

ம.பி.யில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் பலி; ஒருவர் கவலைக்கிடம்

மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சத்தர்பூர் மாவட்டம் பரேத்தா கிராமத்தில் பிப்ரவரி 9 ஆம் தேதி ஷிதல் அஹிர்வார் என்பவர் 150 பேருக்கு விருந்து வைத்துள்ளார். இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாங்கிய 'தில்ஸ்' என்ற பெயரில் உள்ள மதுபானமும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஷிதல் அஹிர்வார், அவரது மகன் ஹர்கோவிந்த், மருமகன் லாலுராம் அஹிர்வார் மற்றும் துளசிதாஸ் பிரார் என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிரிழந்தவர்களின் உடல் உறுப்பு மாதிரிகள் மற்றும் மதுபானங்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதுகுறிதது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சத்தர்பூர் காவல் கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்தார். 

மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலி மதுபானம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.