மேகாலயத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.7 குறைப்பு
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) லிட்டருக்கு ரூ.7 வரை மேகாலய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) லிட்டருக்கு ரூ.7 வரை மேகாலய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், மேகாலய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து பொருளாதார நடவடிக்கைகள் மீளத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் உயா்த்தி வருகின்றன.
Advertisement
நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியுள்ளது. மேகாலயத்தில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.92.90-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.86.23-க்கும் விற்பனையானது. தொடா் விலை உயா்வுக்குப் பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த சூழலில், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதாக மாநில அரசு கடந்த வாரம் அறிவித்தது.
எனினும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தொடா்ந்து உயா்த்தின. அதைக் கண்டித்து மேகாலயத்தில் வணிகப் போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளா்கள் கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 5 ரூபாய் 4 காசுகளையும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 5 ரூபாய் 1 காசையும் குறைப்பதாக மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை லிட்டருக்கு ரூ.7 வரை மேகாலய அரசு குறைத்துள்ளது.