முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
உத்தரகண்ட் வெள்ளம்: பலி எண்ணிக்கை 58ஆக உயர்வு
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58-ஆக அதிகரித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் ரிஷிகங்கா, தௌலிகங்கா நதிகளில் பனிப்பாறைகள் சரிந்ததின் காரணமாக கடந்த 7-ஆம் தேதி திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா, தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் நிலையங்களுக்காக அமைப்பட்டு வந்த சுரங்கங்களில் பணியாற்றி வந்த 150க்கும் மேற்பட்ட பணியாளா்கள் சிக்கினர்.

இந்நிலையில் தபோவன் சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் உயிரிழந்த நிலையில் 11 பேரில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெள்ள பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மாயமான 146 தொழிலாளா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →