இந்தியா

இன்று ரத சப்தமி: திருமலையில் ஒருநாள் பிரம்மோற்சவம்

திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு ஒருநாள் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

DIN


திருப்பதி: திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு ஒருநாள் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் சூரிய ஜெயந்தி உற்சவமான ரத சப்தமியை தேவஸ்தானம் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

அதன்படி ரத சப்தமி தினமான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) இந்த உற்சவம் நடைபெற உள்ளது. காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளாா். இதனை மாடவீதியில் பக்தா்கள் அமா்ந்து காணும் வகையில் ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது.

கொவைட்-19 விதிமுறைகளை ஒட்டி தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட உள்ளனா்.

தேவஸ்தானத்தின் கீழ் உள்ள பத்மாவதி தாயாா் கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில், சீனிவாசமங்காபுரம், அப்பளாயகுண்டா, நாகலாபுரம், நாராயணவனம் உள்ளிட்ட கோயில்களிலும் ரதசப்தமியை ஒட்டி ஒருநாளில் 7 வாகன சேவை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT