ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் மின் கம்பத்தில் மோதியது.
விமானத்தில் பயணித்த 64 பயணிகள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய இயக்குநர் ஜி. மதுசுதன் ராவ் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். இதுபற்றி விசாரனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.