முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் விபத்து: 30 உடல் பாகங்கள் கண்டெடுப்பு

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
உத்தரகண்ட் விபத்து: 30 உடல் பாகங்கள் கண்டெடுப்பு
பகிர்:


உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 30 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விபத்து நேரிட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 71 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.