இந்தியா

உ.பி.,யில் பல்வேறு சாலை விபத்துகளில் 12 பேர் பலி

DIN

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். 
உத்தப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பனிப் பொழிவு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். 
உன்னவ் மாவட்டத்தில் உள்ள லக்னௌ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் தனியார் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதியதில் 4 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்தனர். இதேபோல் ஆக்ராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில்  நிகழ்ந்த 2 சாலை விபத்துகளில் 5 பேர் பலியானார்கள். 
மொரதாபாத்தில் உள்ள மொரதாபாத்-பிஜ்னூர் நெடுச்சாலையில் கார், டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT